15.08.2011 இன்று அகரம் சித்தாமூர் அரசு நடுநிலைப் பள்ளியில் இந்திய சுதந்திர தினம் மற்றும் வேதாத்திரி மகரிஷியின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மரம் நடு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் திரு.M.எட்டியான் தலைமை வகித்தார்.
விழுப்புரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் திரு.G.M.செல்வராஜ் முன்னிலை வகித்து உரையாற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் திரு.V.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார்.
ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு.சி.மா.பாலகணேசன், விழுப்புரம் மாவட்ட மூலிகை மரம் வளர்ப்போர் சங்க தலைவர் C.கோவிந்தராசு, மன வளக்கலை மன்ற அன்பர்கள் ஆசிரியர் சண்முகம், அர்பன் பேங்க் ரவி, சிவ.கோவிந்தராசன், நல்லாபாளையம் கிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு தென்னை மற்றும் பழ மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.
ஆசிரியர் திரு.எட்வின் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விடியல் விழிப்புணர்வு இயக்க அன்பர்கள் ரா.சுப்பிரமணியன், சு.விஸ்வநாதன் ஆகியோர் பழ மரக் கன்றுகளை நட்டு உதவினர்.
மன வளக்கலை மன்ற இணைச் செயலர் திரு.துரை.கருணாநிதி நன்றி கூறினார்.
விழா நிறைவில் தேசிய கீதம் பாடப்பட்டது.


No comments:
Post a Comment