இன்று, விழுப்புரம் மாவட்ட சமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பு, விழுப்புரம் ரோட்டரி சங்கம், ஸ்ரீ அரவிந்த் பாரா மருத்துவ மையம் இணைந்து நடத்திய மழைக் கால நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் புதிய பேருந்து நிலையத்தில் நடந்தது. விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.ராமமூர்த்தி அவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நமது விடியல் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் செயலர் திரு.விஸ்வநாதன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மழைக்கால நோய்களும் அவற்றை தடுப்பதற்கான வழிகளும் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகிக்கப் பட்டது.
தினகரன்


No comments:
Post a Comment