Sunday, October 02, 2011

உலக இரத்த தான தினம்

அக்டோபர்-1 உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இந்திய செஞ்சிலுவை சங்கம், விழுப்புரம் சங்கமம் அரிமா சங்கம் ஆகிய அமைப்புகளோடு இணைந்து விடியல் தன்னார்வ ரத்த தான முகாமை நடத்தியது. 



நிகழ்ச்சிக்கு மருத்துவர் திரு.சி.மா.பாலதண்டாயுதம் அவர்கள் தலைமை வகித்தார். அரசு மருத்துவர் திருமதி.செல்வகுமாரி ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு உரை ஆற்றினார். செஞ்சிலுவை சங்கத்தின் இரத்ததான ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழழகன் இரத்ததானத்தின் அவசியம் குறித்து பேசினார். மனவளக்கலை மன்ற இணைச்செயலாளர் திரு.துரை கருணாநிதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

மாணவர்கள், உழைப்பாளர்கள், தொழிலதிபர்கள் என எல்லா தரப்பிலிருந்தும் மொத்தம் 23 பேர் இரத்த தானம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொடுத்ததற்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையின் ரத்தவங்கி பிரிவு மருத்துவ அலுவலர் திருமதி.செல்வகுமாரி அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் விடியல் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

நிகழ்ச்சியில் தான் மட்டும் இரத்ததானம் செய்ததோடு நில்லாமல் தனது நண்பர்கள் பலரையும் இரத்ததானம் செய்ய செய்த நண்பர் திரு.ஆனந்த் அவர்களுக்கு விடியல் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

நிகழ்ச்சி சிறக்க உதவிய இந்திய செஞ்சிலுவை சங்கத்தை சார்ந்த திருமதி.கங்கா வைத்தீஸ்வரன் அவர்களுக்கும், விழுப்புரம் சங்கமம் அரிமா சங்கத்தின் திரு.திலிப் குமார், திரு.கணேஷ் அவர்களுக்கும், மனித வள மேம்பாட்டு மையத்தின் திரு.உமாபதி அவர்களுக்கும் விடியல் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

யார் இல்லாவிட்டால் இந்த நிகழ்ச்சி சாத்தியமாகி இருக்காதோ, அன்பு-தியாகம் போன்ற சொற்களுக்கு, யாரால் அர்த்தம் கொடுக்க முடிந்ததோ அவர்களுக்கு, இரத்ததானம் செய்த அந்த 23 பேருக்கும் விடியல் தனது நன்றியையும், பாராட்டையும், பணிவான வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.


புகைப் படங்களுக்கு இணைப்பை சொடுக்கவும்:

No comments:

Post a Comment