Friday, December 09, 2011

திரு.முரளிதரன்




இரத்த தானம் செய்தவர்: திரு.முரளிதரன் அவர்கள்.

இரத்தம் பெற்று கொண்டவர்: திருமதி. அம்சவள்ளி அவர்கள்
(திரு.சண்முகம் - 9965819747 அவர்களின் சகோதரி), பொன்னங்குப்பம், பானாம்பட்டு, விழுப்புரம்.

சிகிச்சைக்கான காரணம்: எலும்பு நோய்.

மருத்துவமனை: மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மதகடிப்பட்டு, புதுச்சேரி.

திரு.முரளிதரன் அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - S1BPXY

Sunday, November 20, 2011

திரு.ராசு




இரத்த தானம் செய்தவர்: திரு.ராசு அவர்கள்.

இரத்தம் பெற்று கொண்டவர்: திருமதி.              அவர்கள்
(திரு.கிரி - 9626021324 அவர்களின் நண்பர்), நன்னாடு, விழுப்புரம்.

சிகிச்சைக்கான காரணம்: கருப்பை கட்டி அகற்றம்.

மருத்துவமனை: மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மதகடிப்பட்டு, புதுச்சேரி.

திரு.ராசு அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - SEAOBN

Saturday, November 19, 2011

உலக கழிப்பறை தினம்



உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு முழு சுகாதார இயக்கத்தின் சார்பில் விடியல் அத்தியூர் திருக்கை கிராமத்தில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தியது. கூட்டத்தில் கழிப்பறையின் அவசியம் குறித்தும், சுகாதாரமாக வாழ்வதின் முக்கியம் குறித்தும் விரிவாக விளக்கப் பட்டது. 

கூட்டத்தில் தலைவர் சுப்பிரமணி, செயலர் விஸ்வநாதன், பிரபு, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினர். கழிப்பறையின் பயன், கழிப்பறை கட்ட அரசின் உதவி, அதற்கு கிடைக்கும் மானியம், மானியம் பெற செய்ய வேண்டியது ஆகியவை குறித்து விரிவாக விளக்கப் பட்டது.

மனவளக்கலை மன்ற செயலர் திரு.துரை.கருணாநிதி அய்யா அவர்களின் உரை மிகவும் சிறப்பாக அமைந்தது.

நிகழ்ச்சியில் சுமார் 150 பெண்கள் கலந்து கொண்டு, ஆர்வமுடன் சந்தேகங்களை கேட்டனர். தங்கள் வீட்டிற்கு கழிப்பறையை கூடிய வரையில் விரைவாக கட்டப் போவதாக அவர்கள் ஆர்வமுடன் தெரிவித்தனர்.

நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் திரு.செந்திலதிபன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். அவருக்கு விடியல் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

புகைப் படங்களுக்கு இணைப்பை சொடுக்கவும்:
https://picasaweb.google.com/117917965317801102284/1911201?authkey=Gv1sRgCPuq0aDejdXGfA

Friday, November 04, 2011

மழைக் கால நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்.

இன்று, விழுப்புரம் மாவட்ட சமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பு, விழுப்புரம் ரோட்டரி சங்கம், ஸ்ரீ அரவிந்த் பாரா மருத்துவ மையம் இணைந்து நடத்திய மழைக் கால நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் புதிய பேருந்து நிலையத்தில் நடந்தது. விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.ராமமூர்த்தி அவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நமது விடியல் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் செயலர் திரு.விஸ்வநாதன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மழைக்கால நோய்களும் அவற்றை தடுப்பதற்கான வழிகளும் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகிக்கப் பட்டது.


தினகரன்


Wednesday, November 02, 2011

விவேகானந்தா கல்லூரியில் இரத்த தான முகாம்



விடியல் விழிப்புணர்வு இயக்கம்லட்சுமிபுரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில் ரோடரக்ட் மற்றும் விழுப்புரம் மாவட்ட தன்னார்வ ரத்ததான இயக்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இரத்த தான முகாமை இன்று நடத்தியது.

முகாமை கல்லூரியின் செயலாளர் திரு.பரந்தாமன் தொடங்கி வைத்தார். விவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் நிர்வாகி திரு.ரமேஷ் சிறப்புரை ஆற்றினார். விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர் திரு.தமிழ்மணி இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார். கல்லூரியின் ரோடராக்ட் ஒருங்கிணைப்பாளர் திரு.சுரேஷ்ராஜா நன்றி உரையாற்றினார்.

கல்லூரியின் நிர்வாக அலுவலர் திரு.சுப்பிரமணியன், விடியல் விழிப்புணர்வு இயக்க தலைவர் திரு.சுப்பிரமணியன், செயலர் திரு.விஸ்வநாதன், விழுப்புரம் மாவட்ட தன்னார்வ ரத்த தான இயக்க செயலர் திரு.கோபிநாத் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

நிகழ்ச்சியில் 41 மாணவர்கள் இரத்த தானம் செய்தனர். விழுப்புரம் அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்கப்பட்டது.

மனவளக்கலை மன்ற இணை செயலாளர் திரு.துரை.கருணாநிதிசமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பின் செயலாளர் திரு.பாபு செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புகைப் படங்களுக்கு இணைப்பை சொடுக்கவும்:

Sunday, October 23, 2011

திரு.கணேசன்



இரத்த தானம் செய்தவர்: திரு.கணேசன் அவர்கள்.

இரத்தம் பெற்று கொண்டவர்: திரு.வேதகிரி அவர்கள்
(திரு.இரமேஷ் - 9443227529அவர்களின் தகப்பனார்), 
186, நாப்பாளைய தெரு, விழுப்புரம்.

சிகிச்சைக்கான காரணம்: வயிற்று கட்டி.

மருத்துவமனை: நித்யானந்தம் மருத்துவமனை, வடக்குத் தெரு, விழுப்புரம்.

திரு.கணேசன் அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - LEAONR

Saturday, October 22, 2011

திரு.விஜயன்




இரத்த தானம் செய்தவர்: திரு.விஜயன் அவர்கள்.

இரத்தம் பெற்று கொண்டவர்: திரு.அன்பு ராஜ் அவர்கள்
(திரு.சக்திவேல் - 9043969540அவர்களின் நண்பர்), விழுப்புரம்.

சிகிச்சைக்கான காரணம்: விபத்து.

மருத்துவமனை: மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மதகடிப்பட்டு, புதுச்சேரி.

திரு.விஜயன் அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - SEBPBR

Friday, October 07, 2011

ச.பிரபாகரன்


இரத்த தானம் செய்தவர்: திரு.ச.பிரபாகரன் அவர்கள்.

இரத்தம் பெற்று கொண்டவர்: திருமதி.ஜமுனா பாய் அவர்கள்
(திரு.சுந்தர் ராவ் - 9597042922அவர்களின் மனைவி), விழுப்புரம்.

சிகிச்சைக்கான காரணம்: கல்லீரல் வீக்கம்.

மருத்துவமனை: மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மதகடிப்பட்டு, புதுச்சேரி.

திரு.பிரபாகரன் அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - SEBNBR

Sunday, October 02, 2011

உலக இரத்த தான தினம்

அக்டோபர்-1 உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இந்திய செஞ்சிலுவை சங்கம், விழுப்புரம் சங்கமம் அரிமா சங்கம் ஆகிய அமைப்புகளோடு இணைந்து விடியல் தன்னார்வ ரத்த தான முகாமை நடத்தியது. 



நிகழ்ச்சிக்கு மருத்துவர் திரு.சி.மா.பாலதண்டாயுதம் அவர்கள் தலைமை வகித்தார். அரசு மருத்துவர் திருமதி.செல்வகுமாரி ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு உரை ஆற்றினார். செஞ்சிலுவை சங்கத்தின் இரத்ததான ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழழகன் இரத்ததானத்தின் அவசியம் குறித்து பேசினார். மனவளக்கலை மன்ற இணைச்செயலாளர் திரு.துரை கருணாநிதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

மாணவர்கள், உழைப்பாளர்கள், தொழிலதிபர்கள் என எல்லா தரப்பிலிருந்தும் மொத்தம் 23 பேர் இரத்த தானம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொடுத்ததற்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையின் ரத்தவங்கி பிரிவு மருத்துவ அலுவலர் திருமதி.செல்வகுமாரி அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் விடியல் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

நிகழ்ச்சியில் தான் மட்டும் இரத்ததானம் செய்ததோடு நில்லாமல் தனது நண்பர்கள் பலரையும் இரத்ததானம் செய்ய செய்த நண்பர் திரு.ஆனந்த் அவர்களுக்கு விடியல் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

நிகழ்ச்சி சிறக்க உதவிய இந்திய செஞ்சிலுவை சங்கத்தை சார்ந்த திருமதி.கங்கா வைத்தீஸ்வரன் அவர்களுக்கும், விழுப்புரம் சங்கமம் அரிமா சங்கத்தின் திரு.திலிப் குமார், திரு.கணேஷ் அவர்களுக்கும், மனித வள மேம்பாட்டு மையத்தின் திரு.உமாபதி அவர்களுக்கும் விடியல் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

யார் இல்லாவிட்டால் இந்த நிகழ்ச்சி சாத்தியமாகி இருக்காதோ, அன்பு-தியாகம் போன்ற சொற்களுக்கு, யாரால் அர்த்தம் கொடுக்க முடிந்ததோ அவர்களுக்கு, இரத்ததானம் செய்த அந்த 23 பேருக்கும் விடியல் தனது நன்றியையும், பாராட்டையும், பணிவான வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.


புகைப் படங்களுக்கு இணைப்பை சொடுக்கவும்:

Thursday, September 22, 2011

திரு.சேகர்



இரத்த தானம் செய்தவர்: திரு.சேகர் அவர்கள்.

இரத்தம் பெற்று கொண்டவர்: திருமதி.ராஜாம்பாள் அவர்கள், 
(திரு.மாணிக்கம் - 9944366460 அவர்களின் தாயார்), விழுப்புரம்.

அறுவை சிகிச்சைக்கான காரணம்: கர்ப்பப்பை நீக்கம்.

மருத்துவமனை: மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மதகடிப்பட்டு, புதுச்சேரி.

திரு.சேகர் அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - SEAOPR

Wednesday, September 21, 2011

மு.பாஸ்கர்


இரத்த தானம் செய்தவர்: மு.பாஸ்கர் அவர்கள்.

இரத்தம் பெற்று கொண்டவர்: செல்வி.நிர்மலா தேவி அவர்கள், 
(செல்வி.ஜோதி - 8883505666 - அறுபடைவீடு செவிலியர், அவர்களின் சகோதரி), புதுச்சேரி.

அறுவை சிகிச்சைக்கான காரணம்: கட்டி அகற்றம்.

மருத்துவமனை: அறுபடைவீடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை,
                              கிருமாம்பாக்கம், புதுச்சேரி.

திரு.பாஸ்கர் அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - BAOPSK


Tuesday, September 13, 2011

ஆதி.பிரசன்னா



இரத்த தானம் செய்தவர்: ஆதி.பிரசன்னா அவர்கள்.

இரத்தம் பெற்று கொண்டவர்: திருமதி.மேரி குளோரியா அவர்கள், 
(திரு.ஆண்டனி - 9751075045 அவர்களின் தாயார்), மங்கலம்பேட்டை.

அறுவை சிகிச்சைக்கான காரணம்: இடுப்பு எலும்பு நழுவியது.

மருத்துவமனை: இராஜீவ்காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை,
                               பாகூர், புதுச்சேரி.

திரு.பிரசன்னா அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - SVBNRS

Sunday, September 11, 2011

ப.முருகன்


இரத்த தானம் செய்தவர்: ப.முருகன் அவர்கள்.

இரத்தம் பெற்று கொண்டவர்: திருமதி.காமாட்சி அவர்கள் (திரு.சம்பத் 9894169307 அவர்களின் சகோதரி), ஒமிப்பேர் - மரக்காணம்.


அறுவை சிகிச்சைக்கான காரணம்: மகப்பேறு.


மருத்துவமனை: PIMS மருத்துவ கல்லூரி மருத்துவமனை,
                               காலாப்பட்டு, புதுச்சேரி.

திரு.முருகன் அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது.

Wednesday, August 24, 2011

ஜன லோக்பால் - உண்ணா விரதம்

22/08/2011  அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வலிமையான லோக்பாலை வலியுறுத்தி, அன்னா ஹசாரே அவர்களுக்கு ஆதரவாக, நமது இயக்கம் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப் பட்டது. 


நிகழ்ச்சிக்கு தலைவர் திரு. ரா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் திரு.செல்வராஜ் உட்பட மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். வள்ளலார் அறக்கட்டளையின் தலைவர் திரு. வீரப்பன், பொருளாளர் திரு. ஜெயச்சந்திரன் உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்க தலைவர் திரு. கோவிந்தராஜ்,  கக்கன்ஜி லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்க செயலர் திரு. ராஜாங்கம், சென்ட்ரல் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், பேராசிரியர் பீம.தனஞ்செயன், GK TV திரு.கந்தன் மற்றும் நமது நண்பர்கள் வேல், அகிலன், சிவா, அருள், ரங்ககுமார், வைத்தி, வீரசேகர், முருகவேல், புதுராஜா, செந்தில், சந்தோஷ்குமார், தனசேகர், அம்ஜத், சீனு, ஸ்ரீதர், விநாயகம், ஆனந்த் உட்பட ஊழலுக்கு எதிரான பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பேரவையினர் இந்த உண்ணாவிரதத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.

இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதை கேள்விப்பட்டு,  சுதந்திரப்போராட்ட தியாகி திரு. நாராயணசாமி அவர்கள் (95 வயது) புதுவையிலிருந்து வந்து கலந்துகொண்டதும், இதே நாளில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் நடைபெற்ற மாற்று திறனாளிகளின் கூட்டத்திற்கு வந்த, இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்ட திரு. புண்ணியகோடி, மாற்று திறனாளிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் நமது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் நெகிழ்ச்சி அளித்தது.

நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒரே ஒரு பெண்ணாக தனியே அமர்ந்து திருமதி. கங்கா வைத்தீஸ்வரன் அவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

நிகழ்ச்சி இறுதியில் பேராசிரியர் திரு. பழமலய், மருத்துவர் திரு. சி.மா.பாலதண்டாயுதம், பொறியாளர் சங்க முன்னாள் செயலர் திரு. மணிவண்ணன் ஆகியோர் பேசினர்.

மாநில நீர்வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் திரு. தேவராஜ் அவர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

தியாகி திரு. நாராயணசாமி அவர்கள் பழச் சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இயக்க தலைவர் திரு. ரா.சுப்பிரமணியன் நன்றி உரை ஆற்றினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக முதல் நாளிலிருந்தே சாப்பிடாமல்  ஆர்வமாக உழைத்த மனவளக்கலை இணை செயலர் திரு. துரை.கருணாநிதி அவர்களுக்கும், தனது எல்லா வேலைகளையும் விட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற எல்லா வழிகளிலும் ஒத்துழைப்பு தந்து உடனிருந்து பணியாற்றிய JK Printers திரு. ஜெயவசந்தன் அவர்களுக்கும் விடியல் தனது நன்றியை தெரிவித்து கொள்கிறது. இவர்கள் இருவரின் ஒத்துழைப்பு இல்லாமல் நிகழ்ச்சி இவ்வளவு சிறப்பாக நடந்திருக்காது.

அக்குபங்க்சர் மருத்துவர் Care & Cure திரு.ரா.சிவக்குமார் அவர்கள் நிகழ்ச்சிக்கான விதையிட்டதிலிருந்து, நிகழ்ச்சி முடியும் வரை உடனிருந்து உதவினார் அவருக்கும், நேரம் நள்ளிரவை நெருங்கினாலும் அயராமல் நிகழ்ச்சிக்காக உழைத்த திரு. வேலு, திரு. மணி ஆகியோருக்கும் விடியல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


புகைப் படங்களுக்கு இணைப்பை சொடுக்கவும்:

Monday, August 15, 2011

இந்திய சுதந்திர தின விழா

15.08.2011 இன்று அகரம் சித்தாமூர் அரசு நடுநிலைப் பள்ளியில்  இந்திய சுதந்திர தினம் மற்றும் வேதாத்திரி மகரிஷியின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மரம் நடு விழா சிறப்பாக நடைபெற்றது. 



விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் திரு.M.எட்டியான் தலைமை வகித்தார்.
விழுப்புரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் திரு.G.M.செல்வராஜ் முன்னிலை வகித்து உரையாற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் திரு.V.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார்.

ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு.சி.மா.பாலகணேசன், விழுப்புரம் மாவட்ட மூலிகை மரம் வளர்ப்போர் சங்க தலைவர் C.கோவிந்தராசு, மன வளக்கலை மன்ற அன்பர்கள் ஆசிரியர் சண்முகம், அர்பன் பேங்க் ரவி, சிவ.கோவிந்தராசன், நல்லாபாளையம் கிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு தென்னை மற்றும் பழ மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினர். 

ஆசிரியர் திரு.எட்வின் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 


விடியல் விழிப்புணர்வு இயக்க அன்பர்கள் ரா.சுப்பிரமணியன், சு.விஸ்வநாதன் ஆகியோர் பழ மரக் கன்றுகளை நட்டு உதவினர். 



மன வளக்கலை மன்ற இணைச் செயலர் திரு.துரை.கருணாநிதி நன்றி கூறினார்.

விழா நிறைவில் தேசிய கீதம் பாடப்பட்டது.